மதுரை பேச்சியம்மன் படித்துறை பலருக்குத் தெரிந்திருக்குமா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இனி பல பிறவிகளில் என்னால் எளிமையாக அடையாளம் காட்டப்படும் உறுதி உள்ள பாண்டி மாநகரின் பல்வேறு மூலை முடுக்குகளில் குழந்தைப்பருவம் முதல் நான் குதித்தோடிய கன்னி மூலை பேச்சியம்மன் படித்துறை தான் என் அடைமொழி. மதுரை மல்லி மணம் வீசுகிறதோ இல்லையோ மதுரைத் தமிழ் மணம் நான் இப்போது வசித்து வரும் சிங்காரச் சென்னையிலும் கூட என் இதயத்துக்குள் நொடிக்கு நொடி என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

No comments: