ராசீவ் மரணமும் விதியின் விளக்கமும்

விதியை நம்பும் அன்பர்களுக்கான் பதிவு இது அல்ல. ஆனால் விதியை நம்பாத மதியாளர்களுக்கு இந்த விஷயம் ஒரு இயல்பான நிகழ்வாகத் தோன்றினாலும் என்ன விளக்கம் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை? சரி விஷயத்திற்கு வருவோம்......

இந்திராகாந்தியின் புதல்வர்கள் இருவர். சஞ்சய்காந்தி மற்றும் ராசீவ்காந்தி...இதில் இந்திராவின் அரசியல் வாரிசாக ஒரு பெரும் சக்தியாக வருவார் என்று எதிர் பார்க்கப் பட்டவர் சஞ்சய் . சராசரி குடும்பத்தலைவனாக வாழ்வை கழிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ராசீவ்.

அரசியலில் அண்ணன் அழகிரி போல் அதிரடியான ஆளான சஞ்சய் காந்திக்கு பொது வாழ்வின் விதிப்படி எதிரிகள் அதிகம் உருவாகவும் அதன் மூலம் அவருக்கு மரணம் வாய்க்க கண்டிப்பாக பல சந்தர்ப்பங்கள் உண்டு. அதேபோல் ஆகாய விமானியாகப் பணியாற்றிய ராசீவிற்கு அவர் தொழிலில் உள்ள இயல்பான ஆபத்துகளின் படி ஆகாய விமான விபத்தில் உயிர்விட பல்வேறு வாய்ப்புகள் உண்டு.

ஆனால் பாருங்கள் அரசியல்வாதியாக இருந்த சஞ்சய் காந்தி ஆகாய விமான விபத்தில் மரணமடைகிறார்.... சம்பந்தமே இல்லாமல் அரசியல்வாதியான ஆகாய விமானி ராசீவ் காந்தி அரசியல் காரணங்களுக்காக உயிர்விடுகிறார்... இரண்டு பேர்களும் ஒரேகுடும்பத்தில் ....அதுவும் அண்ணன் தம்பிகள்....இதைத் தான் விதி என்பதோ....