நான் ஏன் இனி சந்நியாசி ஆவேன்?

தறிகெட்ட வேகத்தில் பைக்கிலும்
தூரே தளர்ந்து விழும் பூவிதழில்
துல்லியமாய் உன் முகம்

கணினியின் ஒன்று பூஜ்ஜியம்
ஓட்டங்களுக்கு இடையில்
உன் இமைகள் கவிழ்வது துல்லியமாய்

செல்போன் தகவல் சிதறிய
அலைகளுக்கு நடுவில்
உன் அலையாடும் கூந்தல் துல்லியமாய்

பிக்சல்கள் ரங்கோலி விளையாடும்
படத் தொகுப்பு ஆச்சர்யங்களில்
உன் பட்டுக் கன்னங்கள் துல்லியமாய்

வேறெதுவும் தெரியவில்லை ஆதலால்
அணுக்களின் தொகுப்பு இவ்வுலகம்
என்ற அத்வைதம் புரிந்தது......

காமம் செத்துக் காதல் நிறைந்ததால்
நான் ஏன் இனி சந்நியாசி ஆவேன்?