சிகரம் அமைப்பின் சிறப்பான கருத்தரங்கம்

சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சிலர் சேர்ந்து வெற்றிகரமாக நடத்திவரும் ஊடகவியல் தொடர்பான சிகரம் அமைப்பின் திரு.ஆனந்தபத்மனாபனின் (கலைஞர் டி.வீ) அழைப்பை ஏற்று சென்னை அண்ணாநகரில் நேற்று ஜெய் கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இணையதளத்தில் எப்படி ஒலி மற்றும் ஒளிபரப்பு செய்வது என்பது பற்றி மூத்த மக்கள் தொடர்பாளர் திரு.ப்ரயம் பாயின்ட் ஸ்ரீநிவாசன் அவர்கள் மிகச்சிறப்பான செய்முறை விளக்கத்தை அளித்தார். பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகை நண்பர்கள் பங்குபெற்ற அந்த கருத்தரங்கில் முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்களுடனான கைபேசி வழியிலான பேட்டி மற்றும் ப.சிதம்பரம் நோக்கி பத்திரிகையாளர் கூட்டத்தில் காலனி வீசிய ஜர்னைல் சிங்கை சூட்டோடு சூடாக அவர் கை பேசி வழியாக பேட்டிஎடுத்து இணையத்தில் ஒளிபரப்பிய முயற்சி ஆகியவை மிக சுவையான அனுபவமாக இருந்தது. இணையதள தொழில் நுட்பங்களை இனிய முகத்தோடு இலவசமாக சொல்லிக்கொடுக்கும் இன்போசிஸ் செல்வா விழாவைச் சிறப்பித்தார். சிகரம் அமைப்பிற்கு பாராட்டுகள். சிகரத்தின் ஆனந்து தொடர்புக்கு: இணையதள ஒலி ஒளிபரப்பு எனப்படும் (9962584170) பற்றிய ஐயப்பாடுகளை களைந்து கொள்ள திரு.சீனிவாசன் அவர்களின் இணையதள முகவரி: www.prpoint.com

1 comment:

Padman said...

கட்டுரையில் சுருக்கமாக சொல்ல வேண்டியதை சொன்ன பாங்கு மிக அருமை. சிகரத்தைப் பாராட்டியதற்கு நன்றி. கணேசன் போன்ற நண்பர்களின் ஒத்துழைப்போடு சிகரத்தின் பயணம் தொடரும். இணையதள ஒலி ஒளி பரப்பிற்குப் பெயர் பாட்காஸ்டிங் (podcasting). தமிழகத்தில் இத்துறையில் முன்னோடியாகத் திகழும் திரு. பிரைம் பாயிண்ட் ஸ்ரீனிவாசனின் செல்பேசி எண் 9716650273 . அன்புடன் பத்மன் (நா. அனந்த பத்மநாபன்)