நடிகர்திலகத்தின் நினைத்துப் பார்க்கமுடியாத கலைநுணுக்கம்

நடிப்புலக மாமேதை சிவாஜி கணேசன் "நடிகர் திலகம்" என்று அழைக்கப்பட்டது புது விஷயமல்ல. வரலாறு போற்றும் அவரது பல கதாபாத்திரங்களை வரும் கால தலைமுறை முயற்சி செய்து கொண்டிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் இப்போது சொல்லவரும் விஷயம் யாரும் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாத மிக நுண்ணியமான அவரது நடிப்பைப் பற்றியது.
கெளரவம் திரைப்படத்தில் "பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி" என்று ஒரு அருமையான பாடல் வரும்.

பாடலைக் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் பாடல் துவங்கும் சமயத்தில்
அவர் கையில் விஸ்கி கோப்பையுடன்பாடஆரம்பிப்பார். மிகுந்த வேதனையும் சுயகர்வமும் கலந்து விறு விறு என்று நடந்து கொண்டே பாட ஆரம்பிப்பார் .
அடுத்த சரணத்தில் கொஞ்சம் விஸ்கி உள்ளே சென்றவுடன் மெதுவாக உடல் அசைவில் மாற்றம் காண்பிக்க தொடங்குவார்.
அடுத்த சரணத்தில் கால்கள் தள்ளாட மாடிப்படியில் இருந்து இறங்கி வருவார்,
கடைசி சரணத்தில் நடக்கக்கூட முடியாமல் சோபாவில் அமர்ந்து மெல்ல மனைவியின் மடியில் படுத்து தூங்க ஆரம்பிப்பது போல் பாடல் முடிந்துவிடும்.







http://www.youtube.com/results?search_query=palooti+valartha+kili&oq=palooti+valartha+kili&aq=f&aqi=&aql=&gs_sm=s&gs_upl=3678l70074l0l75365l111l99l9l72l3l10l18378l144367l0.1.5-1.1.3.2.9l18l0
அவரது பொதுவான மிரட்டும் நடிப்பை விட்டுவிடுங்கள். இந்த அளவிற்கு ஒரு நடிகரால் கதாபத்திரத்தின் உணர்சிகளையும் முகத்தில் கொட்டிக்கொண்டு, பாடலுக்கு மிகச் சரியாக வாயசைத்துக் கொண்டு, ஒரு குடிகாரனின் மெதுவான உடல் தளர்வுகளையும் காட்டிக் கொண்டு அப்படியே திரையில் வாழ்ந்து காட்ட முடியுமா என்ன? சிங்கத் தமிழா...................... நீ உலகம் உள்ளவரை வாழ்வாய் என்பது உண்மை. இப்போது "பாலூட்டி வளர்த்த கிளி" பாடலை கண்டு பரவசமடையுங்கள் .

No comments: