தமிழகத்தில் இந்துமதத்தைக் காத்தது தந்தைப் பெரியாரும், திராவிட இயக்கமுமே.

தமிழகத்தில் இந்துமதத்தைக் காத்தது தந்தைப் பெரியாரும், திராவிட இயக்கமுமே.



இந்தக் கட்டுரை பெரியார் மற்றும் திராவிட இயக்கங்களின் கொள்கையைப் பற்றியது அல்ல. மேலும் இது எந்த மதங்களைப் பற்றிய விமர்சனமும் அல்ல. முழுக்க முழுக்க சூழ்நிலை மற்றும் காலத்தை பொறுத்த ஒரு அலசலே. (மதத்திற்கும் சாதிக்கும் மூடப் பழக்கவழக்கங்களுக்கும் எமனாய் வந்த தந்தைப் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் ஒரு சிறிதும் அவமரியாதை செய்யும் நோக்கம் சத்தியமாக இல்லை)


வெள்ளைக்காரர்கள் காலத்தில் எல்லா துறைகளிலும் கோலோச்சியிருந்த பிராமணர்களின் வருணாசிரம தர்மத்திற்கு கட்டுப்பட்டு சமூகத்தில் பலவிதங்களில் இழிநிலையிலிருந்த பல சமூகத்தவரும் முதலில் மத ரீதியிலான அங்கீகாரமும் சமூக கௌரவமும் வேண்டி மிஷனரிகளின் அரவணைப்பின் கீழ் கிருத்துவ மதத்திற்கு மாறத் தொடங்கினர். இதே சமயத்தில் அவர்களுக்கு நாராயண குரு போன்ற பல சமூக சீர்திருத்தவாதிகள் மதரீதியிலான சமூக கௌரவமும், அங்கீகாரமும் பெறுவதற்கு போராடினாலும் அரசியல் ரீதியிலான அங்கீகாரம் பெற முடியாத சூழல் நிலவிவந்தது. இந்த நிலையில் தான் அகில இந்திய அளவில் அண்ணல் அம்பேத்காரும், தமிழகத்தில் சுயமரியாதை வேண்டி காங்கிரசிலிருந்து பிரிந்து சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியாரும் பெருவாரியான மக்களின் சமூக முன்னேற்றம், அரசியல் விடுதலை மற்றும் சுயமரியாதைக்ககப் போராடினார்கள் . தந்தை பெரியாரிடம் அரசியல் இலக்கணம் பயின்ற அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாயிலாக அரசியல் வெற்றி கண்டு சமூக நீதியை நிலைநாட்டும் பல சட்டங்களை கொண்டு வந்து பல சமூகத்தினரும் தத்தமது மதங்களிலேயே மரியாதையும் சமூக அங்கீகாரமும் பெறமுடியும் வழிவகை செய்து கொடுத்தனர். இதன் காரணமாக சமூக அங்கீகாரம் வேண்டி மதம் மாறும் முடிவில் இருந்த பல சாதிப் பிரிவினர் தங்கள் முடிவுகளை மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். ஆக பெருவாரி மக்களை உள்ளடக்கி ஆனால் ஒரு சிறு பிரிவினரால் கட்டுப் படுத்தப் பட்டு வந்த இந்துமதம் தமிழகத்தில் பின்பற்றுவோர் எண்ணிக்கை அடிப்படையில் பெரும் பாதிப்பிற்குள்ளாகாமல் காக்கப்பட்டது.

1 comment:

M said...

interesting angle on how "anti-hindu" movements actually ended up upholding hinduism....